இப்படி பலப் போராட்டத்துக்குப் பிறகு, மத்திய அரசால் காவிரி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டது. அதன் படி ஒவ்வொரு ஆண்டும், மாதாந்திர அடிப்படையில், தமிழ்நாட்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் எனத் தெரிவித்தது. எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், காவிரி நதி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். அது நமக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீர். அதைக் கர்நாடக அரசு திறந்து விடாதது சரியல்ல. இதையும் தீர்மானத்தில் வலியுறுத்த வேண்டும். இந்தியா கூட்டணி விவாதத்தில் பங்கேற்றப்போது நட்பு அடிப்படையில் காவிரி நீரை கேட்டு இருக்கலாம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் “உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற வார்த்தையை தீர்மானத்தில் இணைக்க வேண்டும்” என்றார் எடப்பாடி. இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்ற கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என தீர்மானத்தில் உள்ளது” என்று பதிலளித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
