கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்குப் புது ரூல்ஸ்! மிஸ் பண்ணாதீங்க...

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தொடர்பான விதிகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. இந்தக் கார்டுகள் தொடர்பான புதிய ஒழுங்குமுறை விதிகள் அக்டோபர் 1, 2023 முதல் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது குறித்து பலரும் தெரிந்துகொள்ளாமலே இருக்கிறார்கள்! 

ஒரு கடைக்குச் சென்று நீங்கள் உங்களது கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்கிறீர்கள் எனில், உங்களுக்கு கார்டு வழங்கிய வங்கியிடம் நீங்கள் பணத்தைக் கேட்கிறீர்கள். ஆனால், இது முதலில் கிரெடிட் கார்டு நெட்வொர்க் வழியாகச் சென்று வங்கியை அடைகிறது. அதன்பிறகு, கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை அங்கீகரிக்கும் வேலையை வங்கிகள் கையாள்கின்றன.

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், கடை உரிமையாளரின் வங்கிக்கும், கார்டு வழங்கிய வங்கிக்கும் இடையே தகவல்களை பரிமாற்றம் இணைப்புப் பாலமாக கிரெடிட் கார்டு நெட்வொர்க்குகள் செயல்படுகிறது.   

பொதுவாக, பெரும்பாலான வங்கிகள் Visa, Mastercard, RuPay போன்ற கார்டு நெட்வொர்க்குகளுடன் பிரத்யேக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே வாடிக்கையாளர்களுக்கு கார்டுகள் வழங்கப்படுகின்றன. 

இந்தியாவில் தற்போது ஐந்து கார்டு நெட்வொர்க்குகள் இருக்கிறது. அவை, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்கிங் கார்ப்பரேஷன், டைனர்ஸ் கிளப் இன்டர்நேஷனல் லிமிடெட், மாஸ்டர்கார்டு ஆசியா/பசிபிக், விசா, ரூபே போன்றவைதான் அந்த ஐந்து கார்டு நெட்வொர்க்குகள்.

Previous Post Next Post