வறுமையில் வாடியவர் சில மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்துள்ளார். திருப்பரங்குன்றம் கோயில் அருகே யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார்.

தான் திரைப்படங்களில் நடித்ததை யாரிடமும் சொல்லாமல் அங்கேயே சாலையோரத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் மோகன் இறந்து கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.
காவல்துறையினர் மோகனின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது திரைப்படத்தில் நடித்த போட்டோக்கள், உறவின முகவரி இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
