அண்ணாமலை பாதயாத்திரை செல்லவில்லை. அவர், பாதயாத்திரை என்ற பெயரில் கூடவே டிராமா கம்பெனியை அழைத்துச் செல்கிறார். ஒவ்வொரு ஊருக்கு அவர் செல்லும்போதும் அவருடனே அழைத்துச் செல்லப்படும் டிராமா கம்பெனிகள் அவருக்கு முன்னதாக வந்து ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாகத்தான் அந்த பாதயாத்திரை நடக்கிறது. அண்ணாமலையின் இந்த பாதயாத்திரை மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பாதயாத்திரை தொடக்கவிழாவில் கலந்துகொண்ட பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் என மூத்த தலைவர்கள் யாரும் இப்போது அண்ணாமலையுடன் பாதயாத்திரையில் இல்லை. அதேசமயம், பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் டாஸ்மாக் பதிலாக கள்ளுக்கடை திறப்போம் என்று கூறுவதும் சாத்தியம் இல்லை” என்றார்.
