தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், டெல்லி, ஜார்க்கண்ட் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்குமிடையே மோதல் போக்கு நீடித்துவருகிறது. மத்திய அரசால் ஆளுநர்களாக நியமிக்கப்பவர்கள், மாநில அரசுகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்ற பிரச்னை சமீபகாலமாக தீவிரடைந்திருக்கிறது. அந்த வகையில், டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே மோதல் நடைபெற்றுவருகிறது.

இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அந்த வழக்கில், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கு காவல்துறை, நில அதிகாரம், பொது உத்தரவு ஆகியவை தவிர, மற்ற எல்லா அதிகாரங்களும் உண்டு’ என்று கடந்த மே மாதம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பு, மத்திய பா.ஜ.க அரசுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
